2025-2026-ம் ஆண்டுக்கான சொத்து வரியினை எதிர்வரும் 30.04.2025 ஆம் தேதிக்குள் செலுத்தினால் 5% சதவீதம் சிறப்பு சலுகை (அதிகபட்சமாக ரூ.5000) வழங்கப்படும் என மதுரை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி 30.04.2025-க்குள் தங்களது சொத்து வரியினை செலுத்தி பயன்பெறுமாறும் மதுரை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் வரிகளை செலுத்துவதற்கு வசதியாக மாநகராட்சி வரிவசூல் மையங்கள் (அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து) 2025 ஏப்ரல் மாதம் முழுவதும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் செயல்படும் என மதுரை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
Leave a Reply