சீமான் – பிரபாகரன் புகைப்படம் எடிட்: இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் பேட்டி!

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுடன் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இருக்கும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கூறியுள்ளார்.

சீமான், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை தனது கொள்கைத் தலைவராக மதிப்பது குறித்து அரசியல் மேடைகளிலும், பல நேர்காணல்களிலும் பேசிவருகிறார். மேலும், பிரபாகரனை சந்தித்த பின்னரே திராவிட சித்தாந்தத்திலிருந்து தமிழ் தேசிய சித்தாந்தத்தை பின்பற்றி தனது அரசியல் பயணத்தை தொடர்கிறார் என்று தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில், பிரபாகரனுடன் சீமான் சந்தித்ததாக கூறப்படும் புகைப்படம், உண்மையானதல்ல என்றும், அது எடிட் செய்யப்பட்டது என்றும் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் ஒரு செய்தி நிறுவனத்திற்குத் தெரிவித்தார்.

தனது முகநூல் பக்கத்தில் அவர், “சீமான் பிரபாகரனை சந்திக்கவே இல்லை. அந்த புகைப்படத்தை எடிட் செய்து கொடுத்தவனாக இருப்பதன் அடிப்படையில் இதைத் தெளிவாக கூறுகிறேன்” என குறிப்பிட்டார். மேலும், பிரபாகரன் உடன் உள்ள புகைப்படத்தை தானே எடிட் செய்ததாக அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த தகவல் வெளியானது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுடன் தன்னிடம் தொடர்பு இருப்பதாக சீமான் தொடர்ந்து கூறி வந்த நிலையில், இப்போது வெளியான தகவல்கள் பல கேள்விகளை எழுப்பி இருக்கின்றன. கடந்த காலங்களில், இந்த புகைப்படங்களை சீமான் தனக்கு ஆதாரமாகச் சுட்டிக்காட்டி வந்தார்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *