தி செம்மொழி

தமிழ் செய்தி இணையதளம்

December 13, 2025

No# 1 தமிழ்நாடு செய்தி இணையதளம்

December 13, 2025

தமிழ் செய்தி இணையதளம்

தமிழ்நாடு அரசு அறிவிப்பு: பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க அனைத்து ரேஷன் கடைகளும் நாளை செயல்படும்

தமிழ்நாடு அரசு அறிவிப்பு: பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க அனைத்து ரேஷன் கடைகளும் நாளை செயல்படும்

சென்னை: தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்க அறிவித்துள்ளது.

உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை வெளியிட்ட அறிவிப்பு:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழர்களின் பாரம்பரியத்தை முன்னிட்டு, 2.20 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்போருக்கும் பொங்கல் பரிசு வழங்க உத்தரவிட்டுள்ளார்.

பொங்கல் பரிசுத் தொகுப்பில்;

ஒரு கிலோ பச்சரிசி

ஒரு கிலோ சர்க்கரை

ஒரு முழு நீள கரும்பு
இவை அடங்கும். கூடுதலாக, விலையில்லா வேட்டி மற்றும் சேலை வழங்கப்படும்.

இந்நிலையில், இன்று (ஜனவரி 9) சைதாப்பேட்டை சின்ன மலையில் உள்ள ரேஷன் கடையில், முதலமைச்சர் ஸ்டாலின், குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, அனைவரும் நேர்மறை முறையில் உடனடியாக பரிசுத் தொகுப்பைப் பெறும் வகையில், நாளை (ஜனவரி 10) அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top