தி செம்மொழி

தமிழ் செய்தி இணையதளம்

July 24, 2025

No# 1 தமிழ்நாடு செய்தி இணையதளம்

July 24, 2025

தமிழ் செய்தி இணையதளம்

“மருத்துவம் படித்தவருக்கு மாமிசத்திற்கும், கழிவிற்கும் வித்தியாசம் தெரியாதது கொடுமை” – செல்வப்பெருந்தகையின் பதிலடி

“மருத்துவம் படித்தவருக்கு மாமிசத்திற்கும், கழிவிற்கும் வித்தியாசம் தெரியாதது கொடுமை”

மாட்டின் கோமியத்தின் மருத்துவ குணங்கள் குறித்து வெளியான கருத்து அரசியல் சூடுபிடிக்க வைத்துள்ளது. சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, சமீபத்தில் மேற்குவங்க மாம்பலத்தில் நடந்த கோசாலா நிகழ்வில், மாட்டின் கோமியம் மருத்துவ குணம் கொண்டது என தெரிவித்தார். இது பல அரசியல் தலைவர்களின் கருத்துக்களையும் விமர்சனங்களையும் பெற்றுள்ளது.

அதன்படி, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், கோமியத்தை “அமிர்த நீர்” என்றும், மாட்டின் சாணத்திலும் கோமியத்திலும் கிருமி நாசினி இருக்கிறது என்றும் கூறினார். மேலும், கோமியத்தின் ஆயுர்வேத மருத்துவப் பயன்பாடு ஆராய்ச்சிப் பரிந்துரைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த கருத்துக்கு பதிலளித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, சமூக வலைத்தளத்தில் தனது கடுமையான விமர்சனத்தை பதிவு செய்தார்.

“ஆங்கிலத்தில் மருத்துவம் பயின்ற தமிழிசை சௌந்தரராஜனுக்கு மாமிசத்திற்கும், கழிவிற்கும் வித்தியாசம் தெரியாதது மிகப்பெரிய கொடுமை. ஆயுர்வேதத்தில் உள்ளதாக சொன்னாலே கண்ணை மூடிக்கொண்டு நம்ப வேண்டுமா?”

“மாட்டின் கழிவு நீரான சிறுநீரை ‘அமிர்த நீர்’ என்று பாஜகவினர் மட்டுமே கூற முடியும். இவர்கள் வெளிநாடுகளில் இதுபோன்ற கருத்துகளை சொல்ல முடியுமா? வட இந்தியாவில் மாட்டை வைத்து கலவர அரசியல் செய்தது போல, தமிழ்நாட்டிலும் மாட்டரசியல் செய்ய வேண்டாம்”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top