
பீலா வெங்கடேசன் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இவர் கொரோனா பெருந்தொற்று காலத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர், தமிழக எரிசக்தி துறை செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் வகித்தவர் ஆவார்.
கடந்த சில நாட்களாக இவர் உடல்நல குறைவு காரணமாக ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் தற்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அண்மையில் தன்னுடைய பெயரை பீலா ராஜேஷ் என்பதை பீலா வெங்கடேசன் என மாற்றிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.