
ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதின.
அகமதாபாத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் குவித்தது.
குஜராத் அணியில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 83 ரன்களும், 64 ரன்களும், பட்லர் 57 ரன்களும் குவித்தனர்.
இதனை தொடர்ந்து 230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணி 13.4 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.
சென்னை அணியில் அதிகபட்சமாக தூபே 47 ரன்கள் சேர்த்தார். குஜராத் அணி சார்பில் ரஷித் கான், மொகம்மது சிராஜ், ரபாடா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
குஜராத் அணியிடம் தோல்வியடைந்தததால் சென்னை அணி தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. சென்னை அணி 2024, 2025, 2026 என தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக ப்ளேஆஃபிற்குள் நுழையாமல் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.